ஜம்மு: டோணி தலைமையிலான இந்திய அணி நேற்று நடந்த டி 20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதை ஜம்மு நகரில் மககள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
வெற்றிக்குத் தேவையான ரன்னை இந்தியா அடித்து முடித்ததும், பெருமளவில் சாலைகளில் திரண்டு வந்த ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இந்தியாவை வாழ்த்தியும் கோஷமிட்டனர்.

ஆர்.எஸ்.புரா பகுதியில், சர்வதேச எல்லைப் பகுதியில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் டிரம்ஸ்களை முழங்கியும், பாலிவுட் பாடல்களைப் போட்டு நடனமாடியும் கொண்டாடினர். மேலும் அவர்கள் இனிப்புகளையும் பகிர்ந்து கொண்டனர்.
ஜம்மு பிராந்தியத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரும் இந்த வெற்றியைக் கொண்டாடியதாக தகவல்கள் கூறுகின்றன.