
மகிழ்ச்சி
அப்போது, துணை கேப்டன் நியமனம் குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த பும்ரா, கேப்டன் ஆவதற்கு சுழற்பந்துவீச்சாளர், வேகப்பந்துவீச்சாளர், பேட்ஸ்மேன் என்று தான் இருக்க வேண்டியது என்பதில்லை. எனக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

புதுசு கிடையாது
என் பணியை சிறப்பாக செய்வேன். ரோகித் சர்மாவுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று கூறினார். பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் வெளிநாட்டில் விளையாடியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதில் அளித்த பும்ரா, இந்திய ஆடுகளங்கள் எனக்கு ஒன்றும் புதுசு கிடையாது. எனக்கு வாய்ப்பளிக்கும் போது எல்லாம் சிறப்பாக செயல்படுவேன் என்று கூறினார்.

யாருக்கு வாய்ப்பு?
டி20 போட்டி எல்லாம் வேகமாக நடைபெறும், டெஸ்ட் போட்டியில் எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்கிறோம் என்பதை பொருத்தது. வீரராக மனதளவில் சில அட்ஜஸ்மண்ட் செய்து கொள்வது முக்கியம். மொஹாலியில் தற்போது ஒரு பயிற்சி முகாம் தான் நடத்தியுள்ளோம். இதுவரை பிளேயிங் லெவன் மற்றம் காம்பினேஷன்கள் குறித்து முடிவு எடுக்கவில்லை.

அஸ்வின் உடல்தகுதி
அஸ்வினும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளார். பயிற்சி மேற்கொண்டு வருகிறார். எந்த வீரருக்கும் தற்போது காயம் இருப்பதாக தெரியவில்லை. 100 டெஸ்ட் என்பது மிகப் பெரிய சாதனை. இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிப்பது என்பது எங்கள் கையில் இல்லை. எங்கள் நோக்கம் எல்லாம் போட்டியில் வெல்வது தான்.


Click it and Unblock the Notifications











