
பிரச்சினையே வேறு?
பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷாவிற்கும், விராட் கோலிக்கும் இடையே தான் உண்மையில் பிரச்சினையே ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணமும் விராட் கோலி அளித்த பேட்டி ஒன்று தான். அதிலிருந்து தான் விராட் கோலி மீது ஜெய் ஷா அதிருப்தி அடைந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

என்ன பிரச்சினை?
கடந்த அக்டோபர், நவம்பர் மாதம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் தான் இந்தப் பிரச்சினையே தொடங்கியது. இதில் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றது. இதில் முகமது ஷமி மீது சிலர் கடுமையாக விமர்சனத்தை வெளிப்படுத்தினர். ஷமி பாகிஸ்தானுக்காக விளையாடியதாக குற்றஞ்சாட்டினர்.

கோலியின் ஆதரவு
இந்த விமர்சனத்தால் அதிருப்தி அடைந்த விராட் கோலி, முகமது ஷமிக்கு முழு ஆதரவு அளித்தார். மேலும் முகமது ஷமி மீது அவதூறு செய்தவர்களை விராட் கோலி கடுமையாக சாடினார்.. விராட் கோலியின் இந்த பேச்சுக்கு ஒரு சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, விராட் கோலியையும் சேர்த்து கேலி செய்தனர்.

அதிருப்தியில் ஜெய்ஷா
விராட் கோலியின் இந்த பேச்சு ஜெய்ஷாவை அதிருப்திக்குள்ளாக்கியது. முகமது ஷமிக்கு ஆதரவாக பி.சி.சி.ஐ.யே மௌனம் காத்த நிலையில், விராட் கோலி மட்டும் ஆதரவாக பேசியது தான் இந்த பிரச்சினைக்கு காரணம், அப்போதிலிருந்தே விராட் கோலி மீது நடவடிக்கை எடுக்க கங்குலியை வைத்து ஜெய்ஷா காய் நகர்த்தி வருகிறார். இதில் ரசிகர்களின் கோபம் கங்குலி மீது திரும்பினால், கங்குலியை ராஜினாமா செய்ய வைத்து, அந்த பதவிக்கு ஜெய்ஷா வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications