
மோசம்
இந்த போட்டியில் இந்திய அணியின் மோசமான தோல்வி காரணமாக பிசிசிஐ கடுமையான கோபத்தில் இருக்கிறது. பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு இதனால் ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். கங்குலியின் மோசமான அணி தேர்வுதான் இதற்கு காரணம் என்று அடுக்கடுக்கான புகார்கள் வைக்கப்பட்டுள்ளது.

ஜெ ஷா
தற்போது இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனும் பிசிசிஐ அமைப்பின் செயலாளருமான
ஜெய் ஷா இந்திய அணி வீரர்களிடம் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார். நேற்று இந்திய அணி வீரர்களையும் பிசிசிஐ தலைவர் கங்குலியையும் சந்தித்து ஜெய் ஷா கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

தேவை
அணியில் என்ன மாற்றம் செய்ய வேண்டும், அணிக்குள் என்ன பிரச்சனை, சொதப்பியது எங்கே என்று கேள்விகளை எழுப்பி உள்ளார். இது போக மூத்த வீரர்களிடம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார். உடனே ரிசல்ட் வேண்டும், அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஜெய் ஷா குறிப்பிட்டுள்ளார்.

உதவி
தேவையான உதவிகளை செய்கிறேன். அணிக்கு தேவையானதை சொல்லுங்கள் என்று ஜெய் ஷா கூறியுள்ளார். இவரின் மீட்டிங் காரணமாக பல முக்கிய வீரர்கள் கலக்கத்தில் உள்ளனர். வீரர்கள் குறித்து ஜெய் ஷா தனித்தனி ரிப்போர்ட் கேட்டுள்ளார்.

ரிப்போர்ட்
வீரர்கள் என்ன செய்ய வேண்டும், யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் ரிப்போர்ட் கேட்டுள்ளார். இதன் காரணமாக இந்திய வீரர்கள் கடுமையான அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடருக்கு பின் அணிக்குள் இதனால் பெரிய அளவில் மாற்றங்கள் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications