
ஜெயசூரியா பிரச்சனை
இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயசூரியா சச்சினுக்கு இணையாக பார்க்கப்பட்ட முக்கியமான வீரர் ஆவார். இலங்கை அணியின் வீரர்களை தேர்ந்தெடுக்கும் செலக்சன் கமிட்டியில் இவர் தலைவராக இருந்தார். ஆனால் இலங்கையின் தொடர் தோல்விகள் காரணமாக இவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
நடக்க முடியவில்லை
தற்போது ஜெயசூரியா நடக்க கூட முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார். இவரது காலில் ஏற்பட்டு இருக்கும் அடியின் காரணமாக இப்படி ஆகியிருக்கிறார். நடக்கும் குச்சிகளை வைத்துதான் தற்போது இவர் சமாளித்துக் கொண்டு இருக்கிறார்.
வேண்டுங்கள்
இவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதுகுறித்து இவர் ''நீங்கள் விரைவாக குணமடைய வேண்டும். உங்கள் நலனுக்காக எல்லோரும் பிராத்தனை செய்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். ரசிகர்கள் பலர் இப்படி டிவிட் செய்துள்ளனர்.
சிறப்பானவர்
இவர் ஜெயசூரியா குறித்து பேசும்போது "ஜெயசூரியா மிக முக்கியமான வீரர்களில் ஒருவர். 1996ல் இலங்கை அணிக்காக உலகக் கோப்பை போட்டியில் முக்கிய பங்குவகித்தார். அவரது காலில் இருக்கும் பிரச்சனை கடவுள் புண்ணியத்தில் சரியாக வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











