
ஐபிஎல் 2023
கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் பார்க்க முடியாத ரசிகர்கள், ஹாட்ஸ்டார் செயலியில் மட்டுமே காண முடிந்தது. அதுவும் குறிப்பிட்ட பணம் செலுத்தி இருந்தால் தான் பார்க்க முடியும். இதனாலேயே பல ரசிகர்கள் போட்டியை நேரலையில் பார்க்க முடியாமல் மறுநாள் ஹைலைட்ஸுகளை பார்த்துக்கொள்ளலாம் என விட்டுச்சென்றுள்ளனர்.

ஜியோ நிறுவனம் திட்டம்
இந்நிலையில் அவர்களுக்காகவே இலவசமாக கொடுத்துள்ளது வியாகாம் நிறுவனம். அதாவது ஜியோ செயலி மூலம் இனி இலவசமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஐபிஎல் போட்டியை நேரலையாக ரசிகர்கள் பார்க்கலாம் என முடிவெடுத்துள்ளது. குறிப்பாக தமிழ், போஜ்பூரி உள்ளிட்ட 11 மொழிகளில் வர்ணனை செய்யப்பட்டு ஒளிபரப்ப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஏன் இந்த இலவசம்?
ஹாட் ஸ்டாரை விட அதிக கோடிகளை குவித்து உரிமையை பெற்றுவிட்டு எதற்காக இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு இருக்கலாம். ஆனால் அங்கு தான் திட்டத்தையே வைத்துள்ளது ஜியோ நிறுவனம். அதாவது ஜியோ நிறுவனம் தற்போது தான் செயலியை பிரபலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே முதலில் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டுள்ளது.

50 கோடி பேர் டார்கெட்
அதன்படி இந்தாண்டு ஐபிஎல் தொடரின் மூலம் 50 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ டிவி செயலிக்கு கொண்டு வர குறிவைத்துள்ளனர். இதற்காக தான் ஐபிஎல் இலவசம் என்ற திட்டம். இதே போல முதலீட்டாளர்களுக்கான தொகைகளையும் குறைத்துள்ளது. முதலில் குறைந்த அளவில் லாபம் பெற்று வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டால், பின்னர் ஏகபோகத்திற்கு லாபம் ஈட்டலாம். இதே திட்டம் தான் ஜியோ சிம் கார்டிலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications