பட்லர் பெஸ்ட்டாம்
போட்டித் தொடரின் நிறைவு நாளில் இதுபற்றி ஆஸி. கேப்டன் டிம் பெய்னிடம் (இவரும் விக்கெட் கீப்பராக செயல்படுபவர்தான்) நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதை பாருங்கள்: பட்லர் தற்போது செம ஃபார்மில் உள்ளார். உலகில் தற்போதைய நிலையில், வெள்ளை பந்து கிரிக்கெட் ஆட்டத்தில், இவர்தான் பெஸ்ட். நான் இப்படி சொல்வதை பலரும் மறுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்.
தோனி சிறப்பு
தோனி சிறந்த பேட்ஸ்மேன்தான். ஆனால் இப்போதைய நிலையில், ஜோஸ் பட்லர் அவரின் திறமையின் உச்சத்தில் உள்ளார். தனது திறமையை அவர் சிறப்பாக தெரிந்து வைத்துள்ளார். இன்சைட் அவுட் ஷாட்டுகளை அவர் சிறப்பாக ஆடுகிறார். அதை சரியாக கையாள்கிறார். ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களும் பட்லர் திறமையை பார்த்து, கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆபத்தில் கை கொடுத்தார்
பட்லர் இந்த தொடரில் மொத்தம் 275 ரன்கள் எடுத்தார். கடைசி ஒருநாள் போட்டியில் 206 ரன்களை விரட்டிய இங்கிலாந்து 50 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, பட்லர் சதம் விளாசி அணியை வெற்றிபெறச் செய்தார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய பட்லர் சுமார் 600 ரன்களை குவித்தார்.
ரசிகர்கள் கோபம்
அதேநேரம் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், மொத்தமே 36 ரன்கள்தான் எடுத்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் ஒரு போட்டியில் 15 ரன்கள் எடுத்ததுதான் என்பது குறிப்பிடத் தக்கது. அதேநேரம், தோனி, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பேட் செய்ததோடு, விக்கெட் கீப்பிங்கிலும் ஜொலித்தார். கேப்டனாகவும் பரிணமித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார். அனைத்து துறைகளிலும் பெஸ்ட்டாக விளங்குகிறார் தோனி. எனவே நெட்டிசன்கள், பெயின் கூறியதை கலாய்த்து வருகிறார்கள்.