
நாட்டிங்காம்: மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் திரும்பியுள்ளார். அவர் மீது இருந்த வழக்கு அவருக்கு சாதகமாக முடிந்த நிலையில், அவர் பெயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், களத்தில் ஆட இருக்கும் பதினோரு வீரர்களை தேர்ந்தெடுப்பதில் தலைவலி ஏற்பட்டுள்ளதாக கூறி இருக்கிறார் ஜோஸ் பட்லர்.
இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து 2-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியோ மோசமான தோல்வியை சந்தித்து, எந்த வீரரும் சரியாக திறமையை வெளிப்படுத்தாத துக்கத்தில் இருக்கிறது.
