ஐபிஎல் இறுதிப் போட்டி.. கண்ணீர் விட்டு கதறிய ஜாஸ் பட்லர்.. தூக்கத்தை தொலைத்த பராக்.. என்ன நடந்தது?
அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன் ஜாஸ் பட்லர் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ராஜஸ்தான் அணி 14 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த நிகழ்வை ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக போட்டிக்கு முன் ராயல்ஸ் வீரர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது.

பழகிவிடும்
அப்போது பேசிய ஜாஸ் பட்லர், இறுதிப் போட்டியில் விளையாடுவதை நினைத்து ஆவலுடன் இருப்பதாக கூறினார். ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் பார்வையாளர்களுக்கு முன்பு விளையாடுவது குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பட்டது. அப்போது பேசிய அவர் முதலில் கொஞ்சம் டென்ஷனாக இருந்தாலும், 3, 4 பந்துக்கு பிறகு அனைத்தும் மறந்துவிடும்.

எல்லாம் மறந்துவிடும்
போட்டியின் முழுவதும் கவனம் சென்றுவிடும். இதனால் அதன் பிறகு பார்வையாளர்கள் என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், மும்பை, சென்னை ரசிகர்கள் முன்பு விளையாடுகிறோமா என எல்லாம் மறந்துவிடும். இருப்பினும் இறுதிப் போட்டியை சிம்பிளாகவும், சுதந்திரமாகவும் விளையாட உள்ளோம் என்று பட்லர் கூறினார்.

பட்லர் கண்ணீர்
ராஜஸ்தான் அணியின் முதல் கேப்டன் வார்னேவின் மறைவுக்கு பிறகு, இந்தப் போட்டி நடைபெறுவதால் கோப்பையை வென்று அவருக்கு சமர்பிக்க வீரர்கள் முயற்சி செய்ய உள்ளனர். இது குறித்து பட்லரிடம் கேள்வி எழுப்பட்டது. அப்போது திடீரென்று பட்லர், வார்னே பற்றி பேசியதும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தூக்கம் இல்லை
இதனிடையே இறுதிப் போட்டி குறித்து கருத்து தெரிவித்து ராஜஸ்தான் அணியின் வால் பையன், ரியான் பராக் இறுதிப் போட்டியை நினைத்து நேற்றிரவு எனக்கு தூக்கமே வரவில்லை. 4 மணி நேரம் தான் தூங்கினேன். உங்களுக்கு எல்லாம் எப்படி இருக்கிறது என்று ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications