
கப்பல்- விமானம்
அமெரிக்காவில் பிரபலமான என்.பி.ஏ., அணிகள் பல, சொந்தமாக சொகுசு கப்பல், விமானம் வைத்துள்ளன. சில கோல்ப் விளையாட்டு வீரர்களும் தனியாக விமானம் வைத்துள்ளனர். அதுபோல, இந்திய கிரிக்கெட் அணிக்கும் தனியாக விமானம் வாங்கலாம்.

காசுதான் கொட்டி கிடக்கே
அதை வாங்கும் சக்தி பிசிசிஐக்கு உள்ளது. நன்றாக சம்பாதிப்பதால், சில வீரர்கள் கூட சொந்தமாக ஏரோபிளேன் வாங்க முடியும் என்கிறார் கபில்தேவ்.

100 பேர் உட்காரக் கூடிய அளவில்
100 பேர் உட்காரக் கூடிய, ஏர்பஸ் ஏ-318 விமானம், ரூ. 500 கோடி ரூபாயாகும். இதைத் தவிர அதன் பராமரிப்பு செலவுகள் உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை அளித்ததன் மூலம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து, ரூ.16,347 கோடி கிடைக்க உள்ளது.

டோணிக்கு ஹெலிகாப்டர்
ஏற்கனவே உலகின் பணக்கார கிரிக்கெட் சங்கமான பிசிசிஐக்கு ஏரோபிளேன் வாங்குவது எல்லாம் சுஜூபி என்கிறார் கபில்தேவ். டோணியின் ஹெலிகாப்டர் ஷாட் பார்த்துள்ளோம். அடுத்ததாக, பிசிசிஐயின் ஏரோபிளேன் வாங்கும் நடவடிக்கையையும் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











