டெல்லி : நேற்று முன்தினம் முன்னாள் கேப்டன் கபில்தேவிற்கு திடீரென மாரடைப்பு வந்த நிலையில் அவருக்கு அவசர இருதய ஆபரேஷன் நடத்தப்பட்டது.
இதையடுத்து அவரது நிலை தேறியுள்ளதாகவும் அவர் வழக்கம்போல தனது பணிகளை தொடரலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து இன்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் கேப்டன் கபில்தேவிற்கு நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு வந்த நிலையில் அவர் போர்டிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது நிலை அபாயகட்டத்தை தாண்டியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவரது நிலை தேறியுள்ளதாகவும் அவர் வழக்கம்போல தனது பணிகளை தொடரலாம் என்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் விரைவாக குணமாக விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டவர்கள் பிரார்த்தனை செய்து டிவீட் செய்தது குறிப்பிடத்தக்கது.