உலகக் கோப்பை வென்ற கேப்டன் கபில்தேவ், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கௌதம் கம்பீரின் பதவிக் காலம் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். கம்பீரின் வழிகாட்டுதலின் கீழ், இந்தியா இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தோல்வியைத் தழுவினார்கள்.
இந்தப் பின்னடைவுகள் இருந்தபோதிலும், கபில்தேவ் கம்பீருக்கு ஆதரவு அளித்துள்ளார். பயிற்சியாளர்கள் மைதானத்தில் இல்லை என்பதை வலியுறுத்தி, வெற்றிகளைப் பெறுவது வீரர்கள் மற்றும் கேப்டன்களின் கையில் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கம்பீரின் பங்கு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இருப்பினும், கம்பீர் அணியை வெற்றிக்கு வழிநடத்தும் திறன் இருப்பது குறித்து கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் "எதிர்பார்ப்புகள் எப்போதுமே இந்திய அணி மீது அதிகமாக இருக்கும்.. பயிற்சியாளர்கள் மைதானத்தில் இல்லை, ஆனால் கேப்டன் மற்றும் அணி வீரர்கள் தான் மைதானத்தில் இருக்கிறார்கள்," கபில்தேவ் கூறினார்.
கம்பீருக்குத் தனது ஆதரவை வலியுறுத்தி, ஒவ்வொரு பயிற்சியாளரும் தனித்துவமான யோசனைகள் மற்றும் உத்திகளை கொண்டு வருகிறார்கள் என்று கபில்தேவ் மேலும் விளக்கினார். கம்பீரின் அணுகுமுறை இந்திய கிரிக்கெட்டுக்கு பயனளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். "புதிய பயிற்சியாளர் தனது சொந்த யோசனைகளை வெளியிடுவார், அது நாட்டிற்கு சிறந்த முறையில் சேவை செய்யும் என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் திராவிட் போன்ற முந்தைய பயிற்சியாளர்களிடமிருந்து கம்பீரின் மனநிலை வேறுபடுகிறது என்பதை கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார்.கம்பீர் மட்டுமல்லாமல் அனுபவமிக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அவர்களின் செயல்திறன் குறித்து விமர்சனங்களை எதிர்கொண்டார்கள்.
கோலி 23.75 என்ற சராசரியைப் பெற்றிருந்தார், அதேசமயம் ரோஹித் இன்னிங்ஸுக்கு 6.20 சராசரி மட்டுமே எடுத்தார். இது குறித்து பேசிய கபில்தேவ், "அவர்கள் மிகப்பெரிய வீரர்கள். அவர்கள் எப்போது விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள், எப்போது விளையாடக் கூடாது என்று நினைக்கிறார்கள் என்பதை அவர்கள் சரியாக முடிவு செய்வார்கள் என்று நம்புகிறோம்," என்று கபில்தேவ் கூறினார்.