
இறுதி நாள்
இந்த போட்டியின் கடைசி நாளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 53 ஓவர்களில் 139 ரன்கள் எடுக்க இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ஓபனர்கள் டேவன் கான்வே, டாம் லதாம் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணிக்கு நம்பிக்கை பிறந்தது. இதனால் ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

கெயில் ஜேமிசன்
இந்த பரபரப்பு சமயத்தில், தனது பதற்றத்தைத் தணிக்க பாத்ரூமில் ஒளிந்துக்கொண்டதாக கெயில் ஜேமிசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஜேமிசன், நாங்கள் அறைக்குள் அமர்ந்து தொலைக்காட்சியில் போட்டியை பார்த்து வந்தோம். நேரில் பார்ப்பதைவிட தொலைக்காட்சியில் தாமதமாக இருந்தது.

பதற்றமான சூழல்
இந்திய அணி ரசிகர்கள் ஒவ்வொரு பந்துக்கும் சப்தங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர். இதனால், ஒவ்வொரு தடுப்பாட்டம் அல்லது சிங்கிளே எடுத்தால் கூட விக்கெட் வீழ்ந்தது போன்று பெரும் ஆரவாரம் செய்தனர். ரசிகர்களின் சத்தத்தினாலும், தொலைக்காட்சியில் தாமதமாக ஒளிபரபரப்பு ஆனதினாலும் எனக்கு பதற்றம் அதிகரித்தது. இதனால் போட்டி குறித்து எதுவும் தெரிய வேண்டும் என முடிவு செய்து,

பாத்ரூமில் மறைவு
இதனையடுத்து எந்தவித சப்தமும் இல்லாத இடத்திற்கு செல்ல முடிவெடுத்தேன். அதன்படி பாத்ரூமில் போய் ஒளிந்துகொண்டு பதற்றத்தைத் தவிர்க்க முயன்றேன். எங்கள் அணியின் சிறந்த வீரர்களான பேட்ஸ்மேன்கள் வில்லியம்சன், டெய்லர் இருவரும் பதற்றமில்லாமல் விளையாடி, அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார்கள். அதன்பிறகுதான் நிம்மதியாக இருந்தது.

ஆட்ட நாயகன் விருது
இந்த போட்டியில் பந்துவீச்சாளர் கெயில் ஜேமிசன் தான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை எடுத்து இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த ஜேமிசன், 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஜேமிசனின் பந்துவீச்சுதான் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications











