பெங்களூர்: ராயல் சேலஞ்சேர்ஸ் பெங்களூர் - டெல்லி டேர்டேவில்ஸ் அணிக்கு நடுவே நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் டாசில் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த பெங்களூர் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 69 ரன்கள் விளாசினார்.
இந்த ஐபிஎல் சீசன் தொடங்கியது முதல் கெயில் சூறாவளியா, கெயில் புயலா என்ற கேள்விதான் ரசிகர்கள் மத்தியில் உலவி வந்தது. காயத்தால் கோஹ்லி களமிறங்காததால் கெயில் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இன்றைய போட்டியில் சொதப்பிய கெயில் 8 பந்துகளை சந்தித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றினார். டெல்லி பந்து வீச்சை பதம் பார்த்த கேதர் ஜாதவ் அதிரடியாக 37 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார். இளம் வீரரான கேதர் ஜாதவ் அச்சமின்றி அதிரடி காட்டியதை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.