
ரஞ்சி கோப்பை
எனினும் ஸ்ரீசாந்த்தை பிசிசிஐ கண்டு கொள்ளாமல் இருந்தது. இதனால் இந்தி பிக் பாஸ், திரைப்படம் , ரியாலிட்டி ஷோ என வாழ்க்கையை நகர்த்தி வந்த ஸ்ரீசாந்த்துக்கு, கேரள ரஞ்சி கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து, ரஞ்சி போட்டிக்காக ஸ்ரீசாந்த் கடுமையாக பயிற்சி செய்து வந்தார்.

ஏமாற்றம்
இதே போன்று, ஐபிஎல் மெகா ஏலத்தில் ஸ்ரீசாந்த் தனது பெயரை பதிவு செய்து காத்திருந்தார். அவர் தனது விலையை 50 லட்சம் ருபாயாக நிர்ணயித்து இருந்தார். ஆனால், எந்த ஐபிஎல் அணியும் ஸ்ரீசாந்தை ஏலத்தில் தேர்வு செய்யவில்லை. இதனால் ஸ்ரீசாந்த் ஏமாற்றம் அடைந்தார். இதனால் மீண்டும் ரஞ்சி போட்டியில் கவனம் செலுத்த தொடங்கினார்.

9 ஆண்டுகள்
9 ஆண்டுகளுக்கு பிறகு பிசிசிஐ நடத்தும் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீசாந்த், 40 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில், 2வது போட்டிக்காக ஸ்ரீசாந்த் தயாராகி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஸ்ரீசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி
இது தொடர்பாக டிவிட்டரில் ஸ்ரீசாந்த், மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் ஸ்ரீசாந்துக்கு காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா இல்லை வேறு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதா என்பது குறித்து ஸ்ரீசாந்த் தரப்பு தெரிவிக்கவில்லை. இதனால் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications