
ஏமாற்றம்
இந்திய அணியின் பேட்டிங்கில் ரோகித்தும், ராகுலும் தொடர்ந்து முக்கிய அட்டத்தில் சொதப்பி வருவது ரசிகர்களை ஏமாற்றி வருகின்றனர். ரோகித் கூட நெதர்லாந்திடம் அரைசதம் விளாசினார், ஆனால் தொடக்க வீரர் என்று சொல்லி கொண்டு இந்திய அணிக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜாக இருக்கும் கேஎல் ராகுல், தொடர்ந்து 3 முறையாக சிங்கிள் டிஜிட்டில் ஆட்டமிழந்து ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்.

முதல் ஓவர்
பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் 4 ரன்கள், நெதர்லாந்துக்கு எதிராக 9 ரன்கள் என ஆட்டமிழந்த ராகுல், இன்றைய ஆட்டத்திலும் 14 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். பார்னல் வீசிய சாதாரண முதல் ஓவரை தொடக் கூட முடியாத ராகுல், அதில் ஒரு ரன் கூட சேர்க்கவில்லை.

ஆட்டமிழப்பு
அப்போதே, இன்று இந்தியாவின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று ரசிகர்களுக்கு ரோகித்தும், ராகுலும் ஒரு குறும் படத்தை பிக் பாஸ் கமல் போல் போட்டு காட்டினர். ராகுல் பேட்டை சுற்ற, அதில் தெரியாமல் ஒரு பந்து பேட்டில் பட்டு, அது சிக்சருக்கு சென்றது. ஆனால் ராகுல் நிகிடி பந்தில் மார்க்ரம் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

உலககோப்பையை வெல்லுமா?
இதே போன்று ரோகித் சர்மா சிக்சர் அடிக்க முயன்று, பந்தை சரியாக டைமிங் செய்யாத காரணத்தால், அது கேட்ச் ஆனது. இந்தப் போட்டியை பார்த்த பிறகு ஒன்று மட்டும் நிச்சயம். கேஎல் ராகுலுக்கு இப்படி தொடர்ந்து வாய்ப்பு வழங்கினால், இந்தியா டி20 உலககோப்பையை வெல்லும் வாய்ப்பு கொஞ்சம் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











