
கோலியால் ஆபத்து?
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோகித் சர்மா ஓய்வெடுத்துக் கொண்டார்.விராட் கோலி , கேஎல் ராகுல் ஜோடி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இதில் கே எல் ராகுல் 41 பந்துகளை எதிர் கொண்டு 62 ரன்கள் எடுத்தார். ஆனால் விராட் கோலி 61 பந்துகளை எதிர் கொண்டு 122 ரன்கள் விளாசி அசத்தினார். இதனை அடுத்து விராட் கோலியின் இந்த சதத்தால் கே எல் ராகுல் இடத்திற்கு ஆபத்து வந்து விட்டதாக கருத கருதப்படுகிறது.

ராகுல் ஸ்ட்ரைடக ரேட்
கேஎல் ராகுல் திறமையான வீரராக கருதப்பட்டாலும், டி20 போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு அண்மைக்காலமாக இருந்துள்ளது. 40 பந்துகளை எதிர் கொண்டு 50 ரன்கள் அடிப்பது அணிக்கு சரிவை தான் தரும் என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் காயத்திலிருந்து திரும்பி உள்ள கேஎல் ராகுல் ஆசிய கோப்பை தொடரில் அவ்வளவு மோசமாக ஒன்றும் செயல்படவில்லை.

ஆசிய கோப்பையில் ராகுல்
பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு போட்டியில் கோல்டன் டக் ஆனார். இதேபோன்று இலங்கைக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் ராகுல் 6 ரன்களில் வெளியேறினார். மற்ற மூன்று போட்டிகளில் ஹாங்காங் எதிராக 36 ரன்களும், பாகிஸ்தானுக்கு எதிராக 28 ரன்களும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 62 ரன்களும் ராகுல் குவித்துள்ளார். இதனால் டி20 உலக கோப்பை போட்டியில் கே எல் ராகுல் தொடக்க வீரராக தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

யாருக்கு வாய்ப்பு?
ரோகித் சர்மா அணிக்கு திரும்பினால் ரோகித் சர்மாவும் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கினால் மட்டுமே பன்ட், தினேஷ் கார்த்திக் என இரண்டு சிறந்த வீரர்களுக்கும் அணியில் இடம் கிடைக்கும். இடதுகை பேட்ஸ்மேன் அணிக்குத் தேவை என்பதால் ரிஷப் பண்ட் இடமும், ஃபினிஷர் ரோலில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படுவதால் அவரது இடமும் கண்டிப்பாக பிளேயிங் லெவனில் இடம் பெற வேண்டும்.

ஆஸி. தொடர்
இதனால் தொடக்க வீரராக கே எல் ராகுல் அணியை விட்டு வெளியே சென்றால் மட்டுமே இது நடக்கும் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் விராட் கோலி சதம் விளாசி கே எல் ராகுலுக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் கேஎல் ராகுல் எவ்வாறு செயல்படுவார் என்பதை பொறுத்து டி20 உலக கோப்பை தொடரில் அவருடைய இடம் உறுதி ஆகும்.


Click it and Unblock the Notifications