
கேஎல் ராகுல் நீக்கம்
கேஎல் ராகுல் இந்திய அணியில் பல ஆண்டுகளாக ஆடி வருகிறார். எனினும், கடந்த ஆண்டில் தான் ஒருநாள் மற்றும் டி20 அணியில் நிரந்தர இடத்தை பெற்றார். அதுவரை அணியில் தேர்வு செய்யப்படுவதும், பின் நீக்கப்படுவதுமாக இருந்தார்.

2019 உலகக்கோப்பை
பல வாய்ப்புகளை பெற்றும் இடையே பார்ம் அவுட் ஆனார். ஆனால், 2019 உலகக்கோப்பை தொடர் முதல் அவரது நிலை மாறியது. அந்த தொடரில் காயம் அடைந்த ஷிகர் தவானுக்கு பதில் துவக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடினார்.

விக்கெட் கீப்பர்
அதன் பின் தவான் அணிக்கு திரும்பியதும் மிடில் ஆர்டரில் வாய்ப்பு பெற்றார். அதிலும் தன்னை நிரூபித்தார். பின் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் சொதப்பிய நிலையில், அவர் காயத்தால் விலகிய போது விக்கெட் கீப்பிங் செய்த ராகுல் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக மாறினார்.

பிறந்தநாள் உதவி
தற்சமயம் அணியில் முக்கிய வீரராக இருக்கிறார் ராகுல். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 18 அன்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். அதை அடுத்து அவர் தன் பிறந்த நாளை ஒட்டி "அவேர் பவுண்டேஷன்" (Aware Foundation) எனும் அமைப்பு மூலம் கல்வி கற்க வாய்ப்பு இல்லாத ஏழைக் குழந்தைகளுக்கு உதவ உள்ளதாக கூறி உள்ளார்.

ஏலம்
2019 உலகக்கோப்பை தொடரில் ராகுல் பயன்படுத்திய பேட், மற்றும் அவரது கிளவுஸ், ஹெல்மட், காலில் கட்டும் பேடுகள், மற்றும் இதர நினைவுச் சின்னங்களை பாரத் ஆர்மி எனும் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர் குழு மூலம் ஏலம் விட இருக்கிறார்.

லாக்டவுனில் உதவி
அதில் கிடைக்கும் பணத்தை அந்த பவுண்டேஷனுக்கு அளிக்க இருக்கிறார். கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. அதனால், லாக்டவுனில் தனிமையில் இருக்கும் நிலையில் இந்த உதவியை செய்ய இருக்கிறார் ராகுல்.


Click it and Unblock the Notifications