
புஜாராவுக்கு பதிலாக
இந்த சூழலில், அணியில் ஒரு மிக முக்கிய மாற்றமாக, மிடில் ஆர்டரில் கோலோச்சி வந்த புஜாராவுக்கு முதல் போட்டியில் கல்தா கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முன்பே செய்திகள் வெளியாகின. இதில், ஓரளவுக்கு உண்மையும் இருக்கவே செய்கிறது. WTC ஃபைனலில் புஜாராவின் ஆட்டத்தில் துளிகூட Intent இல்லை என்பதே அவர் மீது வைக்கப்படும் முதன்மையான விமர்சனம். இதனால் தான் அவருக்கு ஓய்வு கொடுக்க கேப்டன் கோலி விரும்புவதாக தெரிகிறது.

முயற்சி செய்து பார்ப்போம்
இந்நிலையில், புஜாராவை நீக்கும் பட்சத்தில் அந்த இடத்திற்கு லோகேஷ் ராகுலை களமிறக்க கேப்டன் கோலி, கோச் ரவி சாஸ்திரி ஆகியோர் சேர்ந்தே முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால், ராகுலோ ஓப்பனிங் வீரர். இவரை மிடில் ஆர்டரில் இறக்கினால் ஒர்க் அவுட் ஆகுமா? என்று கோச் சாஸ்திரி கேள்வி எழுப்பிய போது, அதற்கு 'முயற்சி செய்து பார்ப்போம்' என்று மட்டும் பதில் அளித்திருக்கிறார் கோலி.

கோலி கண்டிப்பு
இந்த முடிவுக்கு சில பிசிசிஐ நிர்வாகிகள் கூட எதிர்ப்புத் தெரிவித்து இருக்கின்றனர். ராகுலை ஓப்பனிங் ஸ்லாட்டுக்கான மாற்று வீரராகத் தான் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், புஜாராவின் மோசமான ஃபார்மை கருத்தில் கொண்டு, இந்த முடிவை துணிந்து கோலி எடுத்திருப்பதாக தெரிகிறது. எனினும். போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒருமாத காலம் முழுமையாக இருப்பதால் இப்போதைக்கு இந்த விஷயம் வெளியே தெரிய வேண்டும் என்று கோலி கண்டிப்புடன் கூறியிருக்கிறாராம்.

பொறுத்திருந்து பார்ப்போம்
அதேசமயம், லோகேஷ் ராகுலிடம் இதுகுறித்து தெளிவாக கோலி எடுத்துரைக்கிறார் என்று தெரிகிறது. அதில், "உனக்கான வாய்ப்பு இது. கடைசி வாய்ப்பு என்றும் வைத்துக் கொள்ளலாம். டெஸ்ட் போட்டிகளில் உன்னை நிரூபித்து விடு" என்று கோலி வார்னிங் கலந்த அட்வைஸ் சொல்லி இருக்கிறாராம். என்ன நடக்கப் போகுது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அந்த மீட்டிங்கில், இளம் வீரர்கள் பலரும் உடனிருக்க, அவர்கள் முன்பே கோலி இதனை சொல்லியிருப்பதாகவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications