
கோலி
இந்த போட்டிக்கு பின்பாக கோலி அளித்த பேட்டியில், கடந்த போட்டியில் சொந்த மண்ணில் ரசிகர்கள் இன்றி மேட்ச் ஆடுவது மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்த போட்டியிலும் முதல் இரண்டு நாள் எங்களுக்கு உற்சாகம் இல்லை. அதன்பின் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. அதிலும் இரண்டாவது இன்னிங்ஸ் சிறப்பாக இருந்தது.

பேட்டி
சென்னை மக்கள்தான் இதை சாத்தியம் ஆக்கியது. மைதானத்தில் மக்கள் இருந்தால் அது எப்படி பயன் அளிக்கும், ஆட்டம் எப்படி மாறும் என்பதற்கு இந்த போட்டி சிறந்த உதாரணம் . சென்னை ரசிகர்கள் மிகவும் புத்திசாலியான ரசிகர்கள். அவர்களுக்கு கிரிக்கெட் குறித்த அறிவு அதிகம் உள்ளது.

உற்சாகம்
அவர்களை உற்சாகப்படுத்துவது என்னுடைய வேலை. இப்படி ஒரு வெயிலில் ஆட வேண்டும் என்றால் அதற்கு இதை போன்ற ரசிகர்கள் தேவை . எங்களுக்கு இது மிகவும் சிறப்பான போட்டியாக இருந்தது. மைதானம் இரண்டு அணிக்கும் சவாலான மைதானமாக இருந்தது.

ஆனால் என்ன
ஆனால் நாங்கள் எங்கள் பேட்டிங்கில் இன்னும் அதிகம் ஆதிக்கம் செலுத்தினோம். பிட்ச்மாறுவதை பார்த்து நாங்கள் அச்சப்படவில்லை . பொறுப்பாக ஆடினோம். இதன் மூலமே இரண்டு இன்னிங்ஸ் சேர்த்து எங்களால் 600 ரன்கள் வரை எளிதாக எடுக்க முடிந்தது.

பேட்டிங்
நாங்கள் நன்றாக பேட்டிங் செய்தால் பவுலர்கள் எங்களுக்காக விக்கெட் எடுப்பார்கள் என்று எங்களுக்கு தெரியும். அதை திட்டமிட்டபடி இன்று பவுலர்கள் செய்து முடித்தனர். சென்னை மக்கள் எங்களுக்கு கொடுத்த உற்சாகத்திற்கு நாங்கள் நன்றி சொல்ல விரும்புகிறோம், என்று கோலி மிகவும் உருக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications