என் பிரண்ட போல யாரு மச்சான்... விளையாட்டோட அழகான விஷயத்தை வெளிப்படுத்திய கோலி
அபுதாபி : அபுதாபியின் சையக் சையத் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஆர்சிபி எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் அணியின் ஏபி டீ வில்லியர்ஸ் உடனான தனது நட்பை தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து வெளிப்படுத்தியுள்ளார் விராட் கோலி.

அந்த பதிவில் விளையாட்டு அழகானது என்றும், விளையாட்டில் பிரெண்ட்ஷிப் மிகவும் அழகானது என்று கூறியுள்ள அவர், அந்த பயணத்தில் சக வீரர்களுடன் பரஸ்பரம் மரியாதையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2020 சீசனின் போட்டிகள் தினந்தோறும் விறுவிறுப்புடன் நடைபெற்றுவரும் நிலையில், விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி இதுவரை தான் மோதிய 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. இதனிடையே நாளை அபுதாபியில் நடைபெறவுள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
இந்நிலையில் அணியின் ஏபி டீ வில்லியர்ஸ் உடனான தனது நட்பை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வெளிப்படுத்தியுள்ளார் விராட் கோலி. விளையாட்டு அழகானது என்றும் அதில் நட்பு மிகவும் அழகானது என்றும் அவர் இந்த பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் சக வீரர்களுடன் பரஸ்பரம் மரியாதையை பகிர வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications