
ஆச்சரியம்
டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை கேட்டு நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம். அவர் தலைமையில் தான் இத்தனை நாட்கள் விளையாடினோம். அவர் இளம் வீரர்களை வளர்த்துவிட்டார். அப்படி இருக்கையில் அவர் டெஸ்ட் கேப்டன் இல்லையா என்ற எண்ணம் ஏற்பட்டது.

கேப்டன்
டோணியை அடுத்து நான் தான் டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டன் ஆகப் போகிறேன் என்பதை அப்போது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

அனுஷ்கா
சிறிது நேரம் கழித்து எனது அறைக்கு சென்றேன். அங்கு அனுஷ்கா சர்மா இருந்தார். அவரிடம் செய்தியை தெரிவித்தேன். அவருக்கும் ஆச்சரியாக இருந்தது. அவர் ஏன் இப்படி செய்தார் என்றார்.

அழுகை
நான் தான் அடுத்த கேப்டன் என்பதை ஏற்கவே எனக்கு சிறிது நேரம் எடுத்தது. அதன் பிறகு நான் அழத் துவங்கிவிட்டேன். இது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

ஸ்பெஷல்
நான் கிரிக்கெட் ஆடத் துவங்கியபோது 26 வயதில் நீ டெஸ்ட் அணியின் கேப்டனாவாய் என்று கூறியிருந்தால் நான் நம்பியிருக்கவே மாட்டேன். ஆனால் அது நடந்துள்ளது. இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே என் ஒரே கனவு. நான் கேப்டனான தருணம் சிறப்பானது என்றார் கோஹ்லி.


Click it and Unblock the Notifications











