For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெல்லி டெஸ்ட் முதல் நாளில் இந்தியா அபாரம்.. 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 371 ரன்கள்

டெல்லியில் இன்று நடைபெறும் 3-ஆவது டெஸ்ட் மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்ய தேர்வாகியுள்ளது.

By Lakshmi Priya

டெல்லி: டெல்லியில் உள்ள பெரோ ஷா கோட்லாவில் நடைபெற்று வரும் 3-ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்களை குவித்தது.

இலங்கைக்கு எதிராக இந்தியா டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. முதலில் கொல்கத்தாவில் நடந்த போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

Kohli elects to bat against Sri Lanka in third Test

இன்று மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லாவில் நடைபெற்று வருகிறது. இந்த முதல் நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது.

இந்திய அணியில் இரு மாற்றங்கள் இருந்தன. கே.எல்.ராகுல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு பதிலாக ஷிகர் தவானும், முகமது ஷமியும் களத்தில் உள்ளனர். அதேபோல் இலங்கை அணியில் ரங்கனா ஹெராத்துக்கு பதிலாக லக்ஷன் சந்தாகன் விளையாடுகிறார். இந்த அணிக்கு கேப்டனாக இருந்து தினேஷ் சந்திமால் வழிநடத்துகிறார்.

இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 371 ரன்களை குவித்தது. இதில் முரளி விஜய் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராத் கோஹ்லி 156 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

முன்னதாக தவான் மற்றும் புஜாரா தலா 23 ரன்களில் அவுட்டாகினர்.

Story first published: Saturday, December 2, 2017, 17:57 [IST]
Other articles published on Dec 2, 2017
English summary
India captain Virat Kohli won the toss and elected to bat against Sri Lanka in the third and final Test at the Feroz Shah Kotla in Delhi on Saturday (December 2).
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+