ஷமி அசத்தல்
அதன் மூலம் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு வழியாக வென்றது. போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இறுதி ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார் முகமது ஷமி. ஆனால், ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப் பட்டது.
கோலி சாதனை
இந்த போட்டியில் கோலி யாரும் அவ்வளவு எதிர்பார்க்காத முக்கிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அவர் நேற்றைய போட்டியில் கோலி நேற்று 67 ரன்களை குவித்தார். அதன் மூலம் கடைசியாக நடந்த 3 போட்டிகளிலும் அரைசதம் அடித்து, முன்னாள் இந்திய அணியின் கேப்டன் அசாருதீன் சாதனையை சமன் செய்துள்ளார்.
மேலும் அரைசதம்
அடுத்ததாக வரும் 27ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் மேலும் ஒரு அரைசதம் அடிக்க வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால், உலக கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4அரை சதங்கள் அடித்த இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
ரசிகர்கள் அதிருப்தி
இந்த தொடரில் இதுவரை கோலி சதமடிக்கவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். அடுத்து வரக்கூடிய போட்டிகளில் நீண்ட நேரம் களத்தில் நின்று, சதம் அடிப்பார் என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.