போர்ட்
இந்த போட்டியில் ஸ்டூவர்ட் போர்ட் போட்ட இரண்டாவது ஓவரில் சுப்மான் கில் முதல் ஸ்லிப்பில் இருந்த பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்தார். இதை ஸ்டோக்ஸ் சரியாக கேட்ச் பிடித்துவிட்டார். ஆனால் பந்து இவரின் கையில் படும்போது, அதன் பாதி பகுதி தரையில் பட்டது.
ஸ்டோக்ஸ்
இதற்கு களத்தில் இருந்த நடுவர் சாப்ட் சிக்னலில் அவுட் என்று கொடுத்துவிட்டார். ஆனாலும் சாப்ட் சிக்னல் என்பதால் மூன்றாவது நடுவர் சோதனை செய்தார். இந்த சோதனையில் பந்து ஸ்டோக்ஸ் கைக்கு செல்லும் முன் லேசாக தரையில் பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
விக்கெட் இல்லை
இதையடுத்து கில் அவுட் இல்லை என்று மூன்றாவது நடுவர் கூறினார். இதையடுத்து ஸ்டோக்ஸ் நேரடியாக சென்று நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். நான் பந்தை சரியாகத்தான் பிடித்தேன். பந்து கீழே குத்தவில்லை என்று வாக்குவாதம் செய்தார்.
— Aditya Das (lodulalit001) February 24, 2021 |
சர்ச்சை
நீண்ட நேரம் ஸ்டோக்ஸ் இப்படி நடுவரிடம் வாக்குவாதம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பார்த்து கோலியும் கடுப்பானார். இது எல்லாம் விக்கெட் இல்லை.. தேவையின்றி வாக்குவாதம் செய்யாதீர்கள் என்று கோலி கத்தினார்.
டிரெஸ்ஸிங் ரூம்
டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து கொண்டு கோபமாக கோலி கத்தினார். கோலி இப்படி கோபமாக குரல் கொடுத்தது வீடியோவாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஸ்டோக்ஸ் பிடித்த கேட்ச் குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.