
கேப்டன்
இந்திய அணியின் கேப்டன் கோலி பொதுவாக களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவதற்கு பெயர் போனவர். களத்தில் சக வீரர்கள், எதிரணி வீரர்கள், நடுவர்கள் என்று பலரிடம் கோலி ஆக்ரோஷமாக செயல்படுவார்.தற்போது இதுவே கோலிக்கு எதிராக திரும்பி உள்ளது.

இரண்டாவது டெஸ்ட்
அதன்படி நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் கோலி நடுவரிடம் வாக்கு வாதம் செய்தார். இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டுக்கு இரண்டாவது இன்னிங்சில் நடுவர் நிதின் மேனன் விக்கெட் கொடுக்கவில்லை. எல்பிடபில்யூ சென்றதை நடுவர் இல்லை என்று கூறினார்.

டிஆர்எஸ்
இதன்பின் டிஆர்எஸ் எடுக்கப்பட்ட போது பந்து லேசாக ஸ்டம்பை உரசி சென்றதால் விக்கெட் கொடுக்கப்படவில்லை.அம்பயர்ஸ் கால் என்று கூறி விக்கெட் கொடுக்கப்படவில்லை. இதனால் நடுவரிடம் கோபம் அடைந்த கோலி நிதின் மேனனுடன் வாக்குவாதம் செய்தார்.

விமர்சனம்
கோலியின் இந்த செயல் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஏற்கனவே உலகக் கோப்பை தொடரிலும் அதற்கு பின் ஆஸ்திரேலிய தொடரிலும் இதேபோல் கோலி நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். 24 மாதத்தில் இரண்டு முறை கோலி டீ மெரிட் புள்ளிகளை பெற்றுள்ளார்.

மூன்றாவது முறை
இதனால் மூன்றாவது முறை டீ மெரிட் புள்ளிகளை பெற்றால் கோலிக்கு தடை விதிக்கப்படும். ஒரு போட்டியில் ஆடுவதில் இருந்து கோலிக்கு தடை விதிக்கப்படும். நேற்று நடந்த டெஸ்டில் கோலி செய்தது விதிமீறல்தான். இதனால் அவருக்கு தடை விதிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.

டீ மெரிட்
கோலிக்கு எதிராக டீ மெரிட் புள்ளிகள் வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. கோலியின் செயல் தவறானது அவருக்கு ஒரு போட்டியில் தடை விதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர். இதில் ஐசிசிக்கு கடுமையான நெருக்கடி வைக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications