இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்கு எதிரான லிமிட்டட் ஓவர் போட்டிகளில் மிடில் ஆர்டரில் ஆட போகும் வீரர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியில் மிடில் ஆர்டரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினார்கள். இவர்கள் இருவரும் பெரிய அளவில் அதிரடியாக ஆடவில்லை.
வீரர்கள்
இதனால் தற்போது 20-20 போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் பண்ட் கம்பேக் கொடுக்க இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக இவர் கம்பேக் கொடுக்க உள்ளார். ஆனால் இன்னொரு மிடில் ஆர்டர் வீரர் யார் என்ற கேள்வி நிலவி வருகிறது.
சூர்ய குமார்
இந்த நிலையில் சூர்யகுமாரை அணிக்குள் கொடுக்க பிசிசிஐ ஆலோசனை செய்து வருகிறது. இதற்காக வைக்கப்பட்ட பிட்னஸ் டெஸ்டிலும் இவர் பாஸ் ஆகிவிட்டார். இதனால் இவரை அணியில் எடுப்பது மட்டுமே பாக்கி. ஆனால் இவரை எடுப்பதில் கோலிக்கு இன்னும் விருப்பம் இல்லை என்கிறார்கள்.
கோலி
ஐபிஎல் 2020 தொடரில் இவருக்கும் கோலிக்கும் உரசல் ஏற்பட்டது. இதை கோலி இன்னும் மறக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் ரோஹித்தை கேப்டனாக்க வேண்டும் என்று செய்யப்பட்ட டிவிட்டை சூர்ய குமார் யாதவ் லைக் செய்ததும் சர்ச்சையானது.
கோபம்
பலமுறை கோலியை பாராட்டி சூர்ய குமார் யாதவ் டிவிட்களை செய்துவிட்டார். அவரை டேக் செய்தும் பார்த்துவிட்டார். ஆனாலும் இவர் மீது கோலிக்கு இன்னும் கோபம் குறையவில்லை என்கிறார்கள். இதனால் மீண்டும் இவர் கல்தா கொடுக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.