
முதல் உலகக் கோப்பை
இந்தியா முதல் முதலாக 1983ல் உலகக் கோப்பை வென்றது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக கபில் தேவ் இருந்தார். இந்த உலகக் கோப்பை போட்டி நடப்பதற்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு கபில் தேவிற்கும், ரோமி பாட்டியா என்பவருக்கும் 1980ல் திருமணம் நடந்தது. சரியாக திருமணம் நடந்த பின் வந்த உலகக் கோப்பையை அவர் வெற்றி பெற்றார்.

2011 உலகக் கோப்பை
1983க்கு பின் பல வருட காத்திருப்பு முடிந்து இந்தியா 2011ல் உலகக் கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக டோணி இருந்தார். கபில் தேவ் போலவே கோஹ்லிக்கும் கல்யாணம் ஆன பின் நடந்த முதல் உலகக் கோப்பை போட்டியாகும் அது. டோணிக்கு 2010ல் சாக்க்ஷி உடன் திருமணம் நடந்தது.

கோஹ்லி
தற்போது இதைவைத்து கோஹ்லி எதிர்காலம் குறித்தும் பேசியுள்ளனர். கோஹ்லிக்கும் அனுஷ்காவிற்கும் தற்போது திருமணம் நடந்து இருக்கிறது. எனவே 2019 உலகக் கோப்பையை கண்டிப்பாக அவர் இந்தியாவிற்கு வாங்கி கொடுப்பார் என்று கூறப்பட்டு இருக்கிறது.
டோணிக்கு ஓகே
இது என்ன புது புரளி என்று பலரும் இந்த செய்து குறித்து கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் டோணி இந்த செய்தி வந்த இணையதள பக்கத்தை லைக் செய்து இருக்கிறார். மேலும் இந்த செய்திக்கு அவர் டிவிட்டரில் ஹார்ட் போட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications