
கோலியின் வழக்கம்
முதல் இரு போட்டிகள் அமெரிக்காவில் நடக்கின்றன. முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணி அமெரிக்காவில் இருக்கிறது. வழக்கமாக கோலியுடன் அவர் மனைவி அனுஷ்கா எங்கு சென்றாலும் செல்வது வழக்கம்.

பல நாடுகளுக்கு பயணம்
அப்படி உலக கோப்பை தொடரிலும் அனுஷ்காவை இங்கிலாந்தில் காண முடிந்தது. அதற்கு முன்னர் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து என அனைத்து நாடுகளுக்கும் இந்திய அணியுடன் அனுஷ்காவும் பயணம் செய்தார்.

அனுமதி
எங்கு சென்றாலும் மனைவியுடன் அவர் பயணித்தார். வீரர்கள் மனைவியுடன் செல்ல பிசிசிஐ அனுமதி அளித்திருந்தது. ஆனாலும், அதிக நாட்கள் சில வீரர்கள் மனைவியுடன் தங்கியிருந்தனர் என்ற குற்றச்சாட்டு இந்திய அணி மீது எழுந்தது. குறிப்பாக இந்த விஷயத்தில் ரோகித் சர்மா ஏகத்துக்கும் சிக்கினார் என்று கூட சொல்லலாம்.

உற்சாக வலம்
தற்போது, அதன் அடுத்த கட்டமாக, அமெரிக்காவில் காணும் இடம் எல்லாம், கோலி,அனுஷ்கா ஜோடியாக இருக்கிறது. இவர்கள் இருவரும் மியாமி நகரை வலம் வந்தனர். அப்போது அவர்களை கண்ட ரசிகர்கள் உற்சாகமாயினர்.
வைரல் போட்டோக்கள்
அவர்களுடன் கோலியும், அனுஷ்காவும் போட்டோ எடுத்துக் கொண்டனர். கோலி, அனுஷ்கா ஜோடி ரசிகர்களோடு இதுபோன்று புகைப்படம் எடுத்துக் கொண்டதும் முதல்முறை அல்ல. எந்த நாடுகளுக்கு பயணம் செய்தாலும் அங்கே அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம். அப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுதந்திரம் இல்லை
இது பற்றி கோலி கூறியதாவது : இந்தியாவில் நாங்கள் இது போன்று வெளியில் சுதந்திரமாக உலாவ முடியாது. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனென்றால் நானும் அனுஷ்காவும் பிரபலமானவர்கள் என்பதால் எங்களுக்கு சிக்கல் இருக்கும். அதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் போது நாங்கள் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்கிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications











