கோபமாக கெட்டவார்த்தையில் கத்திய கோலி.. பச்சை மண்ணு.. அவரை போய் இப்படி நடத்தலாமா?.. பெரும் சர்ச்சை
அகமதாபாத்: இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டிடம் கோலி நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 112 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் இரவு பகல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது. பிங்க் பாலை வைத்து நேற்று இங்கிலாந்து அணிக்கு இந்தியா கடும் நெருக்கடி கொடுத்தது.

அகமதாபாத்
இந்தியாவிற்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறி வருகிறார்கள் . இந்திய அணியின் ஸ்பின் அட்டாக்கை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாகி வருகிறார்கள். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டிடம் கோலி நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

அஸ்வின்
இந்திய அணியின் வெற்றிக்கு இந்த புதிய காம்பினேஷன் பெரிய அளவில் உதவுகிறது. ரஹானே உருவாக்கிய இந்த முறையை தற்போது கோலியும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். ஆனால் 5 பவுலர்களை கோலி அணியில் எடுத்தாலும் 4 பவுலர்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.

அம்பயர்ஸ் கால்
அம்பயர்ஸ் கால் என்று கூறி ரிவ்யூவில் அவுட் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜோ ரூட் அவுட்டாகி பெவிலியன் சென்ற போது கோலி அவரை பார்த்து கோபமாக கத்தினார். கோபமாக கத்தியதோடு ரூட்டை பார்த்து மோசமான கெட்ட வார்த்தையில் திட்டினார்.

ரூட்
ரூட்டும் கோலியும் நல்ல நண்பர்கள். ரூட் ரஹானே போல அமைதியானவர். யாரிடமும் கோபம் அடைபவர் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட ரூட்டை பார்த்து கோலி கோபமாக திட்டியது சர்ச்ச்சையாகி உள்ளது. கோலியின் இந்த செயல் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.


Click it and Unblock the Notifications