
மாற்றம்
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஆடிய கேப்டன் கோலி மீதம் இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இவர் ஆட மாட்டார். தனது மனைவி அனுஷ்கா சர்மாவிற்கு குழந்தை பிறக்க உள்ளதால் இவர் இந்தியா திரும்புகிறார். நாளை இரவு இந்தியா திரும்ப உள்ளார்.

நாடு திரும்பினார்
இந்திய அணியின் கேப்டன் கோலி நாடு திரும்பும் முன் அணியில் இருக்கும் இளம் வீரர்களிடம் முக்கியமான மீட்டிங் ஒன்றை நடத்தி உள்ளார். மீதம் இருக்கும் போட்டிகளில் இந்திய அணியின் இளம் வீரர்கள் எப்படி ஆட வேண்டும் என கோலி அறிவுரை வழங்கி உள்ளார். முக்கியமாக பிளேயிங் லெவனில் ஆட கூடிய வீரர்கள் குறித்தும் கோலி ஆலோசனை செய்துள்ளார்.

யார் ஆட வேண்டும்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் யார் எல்லாம் ஆட வேண்டும், யார் எங்கே இறங்க வேண்டும் என்பது குறித்து கோலி ஆலோசனை செய்துள்ளார். இந்திய அணியில் அடுத்த போட்டியில் சுப்மான் கில், கே.எல் ராகுல், சிராஜ், ஜடேஜா ஆகிய வீரர்களிடம் கோலி நீண்ட நேரம் கலந்துரையாடி உள்ளார்.

நடராஜன்
அதேபோல் வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் நடராஜனை அழைத்து கோலி நீண்ட நேரம் பேசி உள்ளார். நடராஜன் பவுலிங் போடும் விதத்தை கோலி பாராட்டி உள்ளார். வலைப்பயிற்சியில் நடராஜன் பவுலிங் செய்த விதத்தை கோலி பாராட்டி உள்ளார்.

மெசேஜ்
இந்திய அணியில் ஷமி, இஷாந்த் சர்மா காயத்தில் உள்ளனர். இன்னும் ஒரு வீரர் காயம் அடைந்தால் நடராஜன் அல்லது ஷரத்துல் தாக்கூர் இந்திய டெஸ்ட் அணிக்குள் வர வேண்டி இருக்கும். இதனால் இவர்களை அணியில் இணைய தயாராக இருக்கும்படி கோலி குறிப்பிட்டுள்ளார். இவர்கள் இருவர் மட்டுமின்றி இன்னும் சில இளம் வீரர்களையும் சந்தித்து கோலி அறிவுரைகளை வழங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications