
இங்கிலாந்து
இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கும் முன் பிட்சில் ரோலர் வைத்து உருட்டப்படும்.இதில் பவுலிங் செய்யும் அணி எந்த ரோலரை பயன்படுத்தலாம் என்று கூற முடியும். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் கோலி பிட்ச் பெரிதாக இருக்கும் ஹெவி ரோலரை வைத்து உருட்டும்படி கூறினார்.

பேட்டிங்
கோலியின் இந்த முடிவு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. சென்னை பிட்ச் ஏற்கனவே மூன்றரை நாள் ஆட்டம் காரணமாக காய்ந்து போய், பவுலிங் செய்ய ஏற்றபடி மாறியுள்ளது. இதில் மேலும் ஹெவி ரோலர் போட்டால் பிட்ச் இன்னும் அழுத்தம் பெற்று செட்டாகும்.

சில ஓவர்கள்
இதனால் இன்னும் சில ஓவர்கள் பிட்ச் மேலும் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாறும். அதோடு பிட்ச் இன்னும் நன்றாக பவுன்ஸ் ஆகும். இதில் ஸ்பின் செய்தால் எளிதாக வரிசையாக விக்கெட் விழும். இதனால்தான் பிட்சில் ஹெவி ரோலர் போடும்படி கோலி உத்தரவிட்டார்.

பிட்ச் எப்படி
அவர் சொன்னபடி பிட்ச் தற்போது பவுன்ஸ் ஆகி வருகிறது. அதுபோல் ஸ்பின் செய்ய ஏற்றபடி மாறியுள்ளது. இதனால்தான் சரியாக அஸ்வினுக்கு இரண்டாவது இன்னிங்சில் கோலி முதல் ஓவர் கொடுத்தார். அதில் முதல் பந்திலேயே அஸ்வின் பர்ன்ஸ் விக்கெட்டை எடுத்தார்.

பவுலிங்
இதனால் பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி மாறியுள்ளது. இதில் இங்கிலாந்தை முடிந்த வரை 150 ரன்களுக்குள் சுருட்ட இந்தியா திட்டமிடும். இதன் மூலம் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வெற்றியை நோக்கி செல்ல திட்டமிடும்.


Click it and Unblock the Notifications