For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2 கேம் சேஞ்சர்ஸ்.. பெரிய நம்பிக்கை வைக்கும் கோலி..இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாகும் தமிழக வீரர்கள்

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரண்டு தமிழக வீரர்கள்தான் ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது. இவர்கள் இருவரின் ஆட்டம் இந்த தொடர் முழுக்க கவனிக்கப்படும்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி இந்த வாரம் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்க உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டி பல்வேறு காரணங்களுக்காக முக்கியத்துவம் பெறுகிறது. கிட்டத்தட்ட சென்னையில் 2 வருடங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது.

சென்னை

சென்னை

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் யார் எல்லாம் விளையாடுவார்கள் என்ற குழப்பம் நிலவி வருகிறது. அணிக்குள் இருக்கும் பல்வேறு வீரர்களுக்கு இடையே இதில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இரண்டு வீரர்கள் மட்டுமே என்ன நடந்தாலும் கண்டிப்பாக ஆடுவார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழக வீரர்கள்

தமிழக வீரர்கள்

வாஷிங்க்டன் சுந்தர், அஸ்வின் ஆகிய இரண்டு தமிழக வீரர்கள் கண்டிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் ஆடுவார்கள். இவர்களைத்தான் கோலி துருப்பு சீட்டாக பயன்படுத்துவார் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான இவர்தான் முக்கிய வித்தியாசமாக இருந்தார்.

வித்தியாசம்

வித்தியாசம்

முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வின்தான் ஆதிக்கம் செலுத்தினார். இன்னொரு பக்கம் சுந்தர் நான்காவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ஆதிக்கம் காட்டினார். அதிலும் இவர் பேட்டிங் செய்த விதம் மிகவும் சிறப்பாக அமைந்தது. பவுலிங்கிலும் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.

முக்கியம்

முக்கியம்

இதனால் இவர்கள் இருவரையும் கோலி அதிகம் நம்புகிறார். அஸ்வின் ஸ்பின் பவுலராகவும், சுந்தர் ஜடேஜா இடத்தில் ஆல் ரவுண்டராகவும் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரையும் ஒன்றாக நான்கு டெஸ்ட் போட்டியிலும் கோலி இறக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

சென்னை

சென்னை

முக்கியமாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இவர்கள் ஒன்றாக ஆடுவார்கள். சென்னையில் நடக்கும் போட்டி என்பதால் சென்னை பிட்ச் குறித்து இரண்டு பேருக்கும் நிறைய அனுபவம் உள்ளது. இதனால் சென்னையில் இவர்களை இங்கிலாந்துக்கு எதிராக கோலி சிறப்பாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

Story first published: Tuesday, February 2, 2021, 10:11 [IST]
Other articles published on Feb 2, 2021
English summary
Kohli will use Washington Sundar and Ashwin for Team India against England in Chennai test.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+