பெங்களூரு : 8 அணிகள் பங்கு பெறும் கர்நாடகா பிரீமியர் லீக் 20 ஓவர் போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்தியன் பிரீமியர் லீக்(ஐபில்) போட்டி தொடரின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஒவ்வொரு மாநில கிரிக்கெட் வாரியங்களும் 20 ஓவர் லீக் போட்டிகளை நடத்த தொடங்கின.சமீபத்தில் கூட தமிழ்நாடு பிரீமியர் லீக் சீசன் 3 போட்டிகள் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட கர்நாடகா பிரீமியர் லீக் போட்டிகள் தற்போது ஏழாவது சீசனை எட்டியுள்ளது.போட்டிகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த சீசனில் மொத்தம் ஏழு அணிகள் பங்குபெறுகின்றன.அணிகள் விவரம் :பீஜாப்பூர் புல்ஸ்,பெலகாவி பேந்தர்ஸ்,பெல்லாரி தஸ்கர்ஸ்,ஹூப்ளி டைகர்ஸ்,மைசூர் வாரியர்ஸ்,ஷிவமோஹா லயன்ஸ் மற்றும் ப்ளாஸ்டர்ஸ் பெங்களூரு