
உலகக்கோப்பை திட்டங்கள்
2023ம் ஆண்டின் இறுதியில் 50 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக தற்போதே 20 பேர் கொண்ட அணியை தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து தயார் செய்யவுள்ளனர். இதே போல 2024ம் ஆண்டின் இறுதியில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இதற்கு ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் இளம் படை தயாராகி வருகிறது.

ஸ்ரீகாந்தின் பேச்சு
இந்நிலையில் இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசியுள்ளார். அதில், அணியில் தற்போது ஒவ்வொரு வீரரின் பணி குறித்து நன்கு விளங்கியுள்ளது எனத்தெரிகிறது. இஷான் கிஷானின் பலமே அதிரடி தான். சமீபத்தில் இரட்டை சதம் அடித்தார். அவரை போலவே வீரர்களுக்கு சுதந்திரம் கொடுத்து களத்திற்கு அனுப்புங்கள். அவர்கள் செய்வதை செய்யட்டும். ஒரு 3 - 4 வீரர்கள் வரை அணியில் அச்சமின்றி ஆடக்கூடியவர்கள் தேவை.

விராட் கோலி பணி
கடந்தமுறை உலகக்கோப்பையை வென்ற போது கவுதம் கம்பீர் ஒரு தூணை போல நிலைத்து நின்று வென்றுக்கொடுத்தார். அதே போன்று விராட் கோலியும் வரவுள்ள உலகக்கோப்பையில் செய்வார் என நினைக்கிறேன். இதே போல இஷான் கிஷான் போன்ற இளம் வீரர்களுக்கும் அவர் வழிகாட்டுவார் என நம்புகிறேன்.

தரமான அணி
தொடர்ந்து பேசிய அவர், ஒரு அணி என்றால் அச்சமின்றி ஆடும் 4 வீரர்கள், பேட்டிங் ஆல்ரவுண்டர்கள், பவுலிங் ஆல்ரவுண்டர்கள், தூண் போல ஆடக்கூடிய விராட் கோலி போன்றவர்களை கொண்டிருக்க வேண்டும். அதுதான் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு சரியாக இருக்கும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications