டெல்லி : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் வரும் 23ம் தேதி துவங்கவுள்ளது.
இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய வீரர்களுக்கும் விஜய் ஹசாரே கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விஜய் ஹசாரே தொடரில் பரோடா அணியின் கேப்டனாக செயல்பட்ட க்ருணால் பாண்டியாவிற்கும் இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய வீரர்கள் மட்டுமின்றி விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கும் வாய்ப்பளிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய க்ருணால் பாண்டியாவிற்கும் இந்த ஒருநாள் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவா கடந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் பரோடா அணியின் கேப்டனாக பொறுப்பேற்று திரிபுரா உள்ளிட்ட அணிகளுக்கு எதிராக அவர் சதங்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.