Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கம்பீருக்கு குல்தீப் யாதவ் அனுப்பிய மெசேஜ்.. இங்கிலாந்து கவுண்டியில் 10 விக்கெட் வீழ்த்தி சாதனை

மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவுக்கு அதிரடியான செய்தியை அனுப்பியுள்ளார். யார்க்ஷையர் அணிக்காக விளையாடிய அவர், முதல்தர கிரிக்கெட்டில் தனது மிகச்சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்துள்ளார்.

ஹெடிங்லே மைதானத்தில் எசெக்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் குல்தீப் யாதவ் அபாரமாகப் பந்துவீசினார். முதல் இன்னிங்சில் 70 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் வெறும் 50 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 120 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை வீழ்த்தி யார்க்ஷையர் அணியின் 106 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

Kuldeep Yadav Responds to Gambhir with 10-Wicket Haul in English County Cricket

பேட்டிங்கிலும் தன் பங்கிற்கு 36 ரன்கள் சேர்த்த குல்தீப் யாதவ், ஆட்டத்திற்குப் பிறகு பேசுகையில், "இந்திய ஆடுகளங்களை விட இங்குள்ள ஆடுகளங்கள் வேகமாகவும் கூடுதல் பவுன்ஸுடனும் இருக்கின்றன. இதனால் பந்தின் சுழற்சியை பேட்டர்களால் கணிக்க முடிவதில்லை. பேக்-புட்டில் விளையாடும் போது அவர்கள் எளிதாக விக்கெட்டுகளைப் பறிகொடுக்கின்றனர். இந்த மைதானத்தில் பந்துவீசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது" என்று கூறினார்.

சமீபத்தில் நடைபெற்ற இலங்கை டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மிகக் குறைந்த ஓவர்களையே வீசிய குல்தீப் யாதவ், இரண்டாவது போட்டியில் அணியில் இருந்தே நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்ட சரண்ஷ் ஜெயின் விக்கெட் ஏதுமின்றி ஏமாற்றினார்.

இந்த நிலையில், இங்கிலாந்து மண்ணிலேயே 10 விக்கெட்டுகளைச் சாய்த்து தனது திறமையை நிரூபித்துள்ள குல்தீப் யாதவ், அடுத்து வரும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் வழங்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாக உணர்த்தியுள்ளார்.

அஜித் களமிறங்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.. லண்டனில் முக்கிய நிகழ்வு

அஜித் களமிறங்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஜோசப் விஜய்.. லண்டனில் முக்கிய நிகழ்வு

பல ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா சுழற் பந்துவீச்சாளர்களாக ஆதிக்கம் செலுத்தி வந்ததால் குல்தீப் யாதவ் மாற்று சுழற் பந்துவீச்சாளராகவே பல தொடர்களில் வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார். அஸ்வின் ஓய்வுக்கு பிறகும் அவருக்கு டெஸ்ட் அணியில் சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது அவர் கவுண்டி போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டு இருக்கும் நிலையில் இனியாவது தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா? என்று பார்க்கலாம்.

ஷபாலி வர்மா அதிரடி.. இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.. ஆசிய கோப்பையில் வங்கதேசம் படுதோல்வி

Also Read

ஷபாலி வர்மா அதிரடி.. இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.. ஆசிய கோப்பையில் வங்கதேசம் படுதோல்வி
Story first published: Friday, September 11, 2026, 9:25 [IST]
Other articles published on Sep 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+