கொழும்பு: தடை செய்யப்பட்டப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் பெரரேவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை- நியூஸிலாந்து தொடரில் விக்கெட் கீப்பர் குசல் பெரரோ, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தினார் என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு திரும்பி அழைக்கப்பட்டார்.
இதனிடையே பெரரோவின் சிறுநீர் பரிசோதனையில் அவர் ஊக்க மருந்தை உட்கொண்டிருந்தது உறுதியானது. இதனால் பெரரோவுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என்று இலங்கை தெரிவித்துள்ளது.