உஷார்
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்த போது, டேவிட் வார்னர் நிதான ஆட்டம் அடி அரைசதம் அடித்தார். அவர் களத்தில் இருந்த போது, அஸ்வின் பந்துவீசும் போது மட்டும் உஷாராக நடந்து கொண்டார்.
|
வார்னர் எச்சரிக்கை
வார்னர் எதிர்முனையில் நின்று கொண்டிருக்கும் போது, அஸ்வின் பந்துவீசினால், மிகவும் எச்சரிக்கையாக தன் பேட்டை கிரீஸுக்குள் வைத்துக் கொள்வது அல்லது தான் கிரீஸுக்கு உள்ளேயே நின்று கொள்வது என செயல்பட்டார்.
|
மற்றவர்கள் வீசும் போது..
அதே சமயம், மற்ற பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் போது வார்னர் இத்தனை எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. முஜீப் உர் ரஹ்மான் பந்து வீசும் போது வார்னர் சாதாரணமாக கிரீஸில் சில இன்ச் மட்டுமே காலை உள்ளே வைத்திருந்தார்.
பம்மி நிற்கும் வார்னர்
முஜீப் - அஸ்வின் இருவரும் பந்து வீசும் போது வார்னர் எப்படி நிற்கிறார் என்பதை புகைப்படமாக எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். டேவிட் வார்னர் அனுபவ பேட்ஸ்மேன். அவரையே பம்மி, பம்மி கிரீஸுக்குள் நிற்க வைத்து விட்டாரே அஸ்வின் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.