ரூ. 15 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜாமீசன்... தோனி, ரோகித்துக்கு இணையான சம்பளம்... கலக்குங்க ப்ரோ!
சென்னை : ஐபிஎல் ஏலம் 2021 சென்னையில் சிறிய அளவில் நடைபெற்று வருகிறது. இதில் 292 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் நியூசிலாந்து வீரர் கைல் ஜாமீசன் இந்த ஏலத்தில் 15 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை ஆர்சிபி அணி இந்த தொகைக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் இவர் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன்களுக்கு இணையான சம்பளத்தை பெறுகிறார்.
ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. சிறிய அளவில் நடத்தப்படும் இந்த ஏலத்தில் 292 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். முக்கிய எதிர்பார்ப்பிற்குள்ளான வீரர்கள் சிலர் ஏலத்தில் எடுக்கப்படாத நிலையில் இளம் வீரர்களுக்கும் இந்த ஏலத்தில் கிராக்கி காணப்பட்டது.
இந்நிலையில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கைல் ஜாமீசன் இந்த ஏலத்தில் ஆர்சிபி அணியால் 15 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அதிகமான தொகைக்கு அவரை ஆர்சிபி இந்த ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில் இந்த சீசனில் அவர் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கேப்டன்களுக்கு இணையான சம்பளத்தை பெறுகிறார்.


Click it and Unblock the Notifications