அறிவிப்பு
புதிய பயிற்சியாளர்களை தேர்தெடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவெடித்து அதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதனால் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே, நியூசி. வீரர் மைக் ஹெசன் உள்ளிட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பித்தவர்கள்
டாம் மூடி, ராபின் சிங் ஆகியோரும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். ஜான்டி ரோட்சும் தம் பங்குக்கு விண்ணப்பித்து இருக்கிறார். நாட்கள் ஆக, ஆக கடும் போட்டி நிலவுகிறது. இன்னும் யார், யார் விண்ணப்பிக்க இருக்கின்றனர் என்ற சஸ்பென்சும் நிலவி வருகிறது.
லால்சந்த் ராஜ்புத்
இந் நிலையில், அந்த பட்டியலில் யாரும் எதிர்பாராத வகையில் மேலும் ஒருவர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். 2007ம் ஆண்டு இந்திய அணி மேலாளராக இருந்த லால்சந்த் ராஜ்புத் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருக்கிறார். அனேகமாக இவரையே தேர்ந்தெடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜிம். பயிற்சியாளர்
2007ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அப்போது இந்திய அணியின் மேலாளராக இருந்தவர் லால்சந்த் ராஜ்புத். தற்போது ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.