For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர் தோல்வி எதிரொலி: ஜெயசூரியா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தேர்வு குழு ராஜினாமா

ஜெய சூரியா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி தேர்வு குழு ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளது.

By Mathi

கொழும்பு: இந்தியாவுடனான போட்டிகளில் தோல்வியை சந்தித்ததைத் தொடர்ந்து ஜெயசூரியா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வு குழு ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளது.

இந்தியாவுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் போட்டிகளில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை சகிக்க முடியாத இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டனர்.

Lanka selection panel under Sanath Jayasuriya quits en masse

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்காவும் தேர்வுக்குழுவை கடுமையாக சாடியிருந்தார். இந்நிலையில் சனத் ஜெயசூரியா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு இன்று ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளது.

ஜெய சூரியா தலைமையிலான இலங்கை அணியின் தேர்வு குழுவில் களுவிதாரண, ரஞ்சித் மதுருசிங்க, எரிக் உபஷாந்த ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழு ஒட்டுமொத்தமாக இன்று ராஜினாமா செய்துள்ளது.

Story first published: Tuesday, August 29, 2017, 19:59 [IST]
Other articles published on Aug 29, 2017
English summary
Sri Lanka's cricket selectors resigned en masse on Tuesday after the national side suffered another humiliating thrashing on home soil against India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X