
சாதனைகள்தான் முக்கியம்
சில வீரர்களுக்கு தங்களது சாதனைகள் முறியடிக்கப்பட்டு விடுமோ என்ற கவலை அதிகம் இருக்கும். லாராவுக்கும் அப்படித்தான் இருந்தது. 2005 போட்டியில் லாரா 4 ரன்களில் அவுட்டாகி விட்டார். அவுட்டாகிப் போனதும் அவர் டிரஸ்ஸிங் ரூமுக்குப் போய் விட்டார். போய் புத்தகம் படிக்க ஆரம்பித்து விட்டார்.

அவ்வப்போது பால்கனிக்கு வந்து
அப்போது நான் ஆடிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது பால்கனிக்கு வந்து ஸ்கோர்போர்டைப் பார்ப்பார். பின்னர் உள்ளே போய் விடுவார். இதை ராம்நரேஷ் சர்வான் பார்த்துக் கொண்டே இருந்தார்.

அவரது கவலை அப்படி
லாராவின் கவலை என்னவென்றால், எங்கே நான் அவரது சாதனையை மிஞ்சி விடுவேனோ என்பதாகும். இதனால் எனது ஸ்கோர் உயர உயர அவருக்கு கவலையும் ஏறிக் கொண்டிருந்தது.

எதுவும் பேசவில்லை
நான் மதிய உணவு சாப்பிட வந்தபோது அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. எனக்கு எந்த அட்வைஸும் தரவி்லை. எதையுமே சொல்லவில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடு என்று கூட கூறவில்லை. நான் மீண்டும் விளையாடத் திரும்பியதும் வழக்கம் போல அவர் புக் படிப்பதும், ஸ்கோர் பார்ப்பதும், கவலைப்படுவதுமாக இருந்தார் என்று கூறியுள்ளார் கெய்ல்.

சாதனை முறியடிக்கப்படவில்லை
லாரா, இங்கிலாந்துக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 400 ரன்களைக் குவித்து வைத்திருந்தார். ஆனால் கெய்லால் அதை அப்போட்டியில் முறியடிக்க முடியவில்லை. 317 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். அதேபோல 2010ல் மீண்டும் ஒரு முச்சதம் போட்டார் கெய்ல். இம்முறை அவர் இலங்கைக்கு எதிராக 333 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.

என் ஸ்டைல் இது
கெய்ல் மேலும் கூறுகையில் என்னை பலரும் முரட்டுத்தனம் மிக்கவன் என்று கூறுகிறார்கள். தேவையில்லாமல் அவுட் ஆவதாக சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. நான் நிறைய ஷாட் அடிக்கிறேன். சில நேரம் அவுட்டாகி விடுகிறேன். 40 ரன்களில் அவுட் ஆனால் என்ன, 4, ரன்களில் அவுட்டானால் என்ன. எல்லாம் ஒன்றுதான்.

நானும், பெண்களும்
பெண்களுக்கும், எனக்குமான உறவு வித்தியாசமானது அல்லு. என்னை அவர்கள் விரும்புகிறார்கள். நான் அவர்களை விரும்புகிறேன். நான் ஹாட்டானவன்தான். ஆனால் மோசமானவன் அல்ல. ஜமைக்காவில் இப்படித்தான். எல்லாவற்றிலும் நேர்மை இருக்கும். பெண்களைப் பொறுத்தவரை நான் நல்லவன்தான் என்று கூறியுள்ளார் கெய்ல்.


Click it and Unblock the Notifications











