தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம்
இதற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என வரிசையாக உலகின் முன்னணி அணிகளை டெஸ்ட் தொடரில் வீழ்த்தியுள்ள இந்திய அணி, தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்த முனைப்புடன் உள்ளது. இதனால் அணியில் உள்ள குறைபாடுகள் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறைபாடு கூறிய லக்ஷ்மண்
இந்நிலையில் இந்தியாவின் பேட்டிங் வரிசையில் குறைபாடு உள்ளதாக முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியில் நிதானமாக செட்டில் ஆகும் வீரர்கள், அதனை பெரிய ஸ்கோராக எடுத்துச்செல்லாமல் மோசமாக விக்கெட்டை பறிகொடுக்கின்றனர். உதாரணத்திற்கு கான்பூர் டெஸ்டில் ரகானே, புஜாரா அவுட்டானது, மற்றும் சுப்மன் கில் மும்பை டெஸ்டில் நன்கு விளையாடி செட்டில் ஆன பிறகு விக்கெட்டை இழந்தார்.
தொடரும் தவறுகள்
இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. நல்ல தொடக்கத்தை கொடுக்கும் வீரர்கள் முடித்து தருவது தான் அணிக்கு நல்லது. இல்லையென்றால் விளைவுகளை தரும். இந்திய அணியில் தற்போது 5 டாப் க்ளாஸ் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதன்பிறகு சிறப்பான ஃபார்மில் ஆல்ரவுண்டர் ஜடேஜா உள்ளார். அவருக்கு பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உள்ளார்.
Recommended Video
புரிந்துக்கொள்ளுங்கள்
எனவே டாப் ஆர்டரில் இருக்கும் 5 பேட்ஸ்மேன்கள் செட்டில் ஆகி சிறிது நேரம் களத்தில் இருந்துவிட்டால், அதனை பெரிய ஸ்கோராக மாற்றுவது முக்கியம். அப்போது தான் தென்னாப்பிரிக்கா போன்ற அணியை அதன் மண்ணிலேயே வீழ்த்துவது சுலபமாக இருக்கும். இதனை மனதில் வைத்து இந்திய பேட்டிங் ஆர்டர் சிறப்பாக ஆட வேண்டும்.