
பாதி ரன்கள்
அணியின் மொத்த ஸ்கோரில் கிட்டத்தட்ட பாதியான 124 ரன்களை ராயுடு மட்டுமே அடித்து நாட்-அவுட்டாக களத்தில் நின்றார். இந்த பங்களிப்பு காரணமாகவே, 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றியை ருசித்தது. இவருக்கு ஸ்டூவர்ட் பின்னி முக்கியமான நேரத்தில் பார்ட்னர்ஷிப் கொடுத்தார். அவர் 77 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

டோணி காரணம்
இந்நிலையில், அம்பத்தி ராயுடு கூறியதாவது: கடந்த நான்கு வருடங்களாக, டி20 போட்டிகளில் இதுபோன்ற இக்கட்டான தருணங்களை சந்தித்துள்ளேன். இருப்பினும் ஒருநாள் போட்டிகளில் நான் நிலைத்து ஆடுவதற்கு, டோணிதான் காரணம். இதுபோன்ற பல இக்கட்டான தருணங்களில் டோணி களமிறங்கி அணியை காப்பாற்றியதை, டிரஸ்சிங் ரூமில் இருந்து பார்த்துள்ளேன். அவர்தான் எனக்கு இன்ஷ்பிரேஷன்.

ரொம்ப கஷ்டம்
முதலில் பேட்டிங் செய்ததுதான் இந்தியாவின் தொடக்க விக்கெட்டுகள் விரைந்து சரிவடைய காரணம். நான் இங்கிலாந்தில் பேட்டிங் செய்வதை போலத்தான் உணர்ந்தேன். அந்த அளவுக்கு பந்துகள் வந்தன. அடுத்த போட்டியில் டாசில் இந்தியா வெல்ல வேண்டும் என்று விரும்பிக்கொண்டுள்ளேன். பேட்டிங்கிற்கு சவாலான நேரத்திலும் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது.

கோஹ்லி டிப்ஸ்
இந்திய அணியில் எனக்கு தொடர்ச்சியாக இடம் கிடைக்காதது பற்றி வருத்தப்படுவதில்லை. நடப்பு நிலைமை என்ன என்பதை நான் உணர்ந்துள்ளேன். சீனியர்கள் ஆடுவதை பார்த்து ரசிக்கிறேன். அதேநேரம், எப்போதும் ஆடுவதற்கு மனதையும், உடலையும் தயார் நிலையில் வைத்துள்ளேன். மனதை தயார் செய்வதற்கு கோஹ்லி கொடுத்த டிப்ஸ் காரணம்.

கற்பனை கதாப்பாத்திரம்
நான் ஆடாத போட்டியில் கூட, மனதளவில் நான் களத்தில் ஆடிக்கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொண்டு மேட்ச் பார்ப்பேன். இதனால், ஒவ்வொரு சூழ்நிலைக்கு தக்கபடி மனதிலேயே கணக்கீடு செய்வேன். இவ்வாறு செய்வதால், ஆட்டத்தில் நான் தொடர்ந்து இருப்பது போன்ற உணர்வு இருக்கிறது. இதற்காக கோஹ்லிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











