
தேங்கிய தொடர்
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 29ம் தேதி துவங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள், இன்று வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த 24ம் தேதிமுதல் மத்திய அரசு அமல்படுத்திய 21 நாள் ஊரடங்கு தற்போது அடுத்த மாதம் 3ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் குறித்த சந்தேகம் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
பிசிசிஐ அதிகாரிகள் அறிவிப்பு
இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இப்பொழுது நடக்குமா, மூடிய அரங்கத்திற்குள் நடக்குமா, வெளிநாட்டு வீரர்கள் எப்படி இந்தியா வருவார்கள் என்ற பல்வேறு சந்தேகங்களை எழுப்பிவந்த ஐபிஎல் தொடரின் நிலை தற்போது தெள்ளத்தெளிவாகியுள்ளது.

பிசிசிஐ விளக்கம்
அடுத்த அறிவிப்பு வரும்வரை காலவரையின்றி ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், முன்னதாக ஐபிஎல் அணிகளுக்கு இதுகுறித்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்ந்தால், இது மேலும் நீட்டிக்கப்படக்கூடும் என்று கூறப்படுவதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.

கொரோனா லீக்கை முறியடிப்போம்
இதனிடையே, கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருந்தாலும், முதலில் கொரோனா தொற்றை வெற்றிகரமாக முடியறிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பிசிசிஐயின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள ரசிகர்கள், முதலில் உலக கொரோனா லீக்கை முறியடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











