
அணி வீரர் ஷெல்டன் காட்ரெல்
ஐபிஎல் போட்டிகள் வரும் மாதம் 19ம் தேதி யூஏஇயில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் வரும் 20ம் தேதியையொட்டி தங்களது பயணங்களை துவக்கவுள்ளனர். இதனிடையே ஐபிஎல் ஏலத்தில் 8.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் பௌலர் ஷெல்டன காட்ரெல் முதல்முறையாக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவுள்ளார்.

ராகுலின் கேப்டன்ஷிப்பை காண ஆவல்
இவர் தன்னுடைய அணியை சேர்ந்த கிறிஸ் கெயில் மற்றும் நிகோலஸ் பூரன் ஆகியோருடன் இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளார். இந்நிலையில் தன்னுடைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தனித்துவமானவர் என்று ஷெல்டன் காட்ரெல் தெரிவித்துள்ளார். அவர் எவ்வாறு கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார் என்பதை பார்ப்பதற்காக தான் மிகுந்த ஆவலுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

120% திறமையை காட்டுவேன்
இந்திய பௌலர் முகமது ஷமியுடனும் விளையாடுவதில் தான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாகவும் காட்ரெல் கூறியுள்ளார். இந்த தொடரில் தான் தன்னுடைய 120 சதவிகித திறமையை காட்டவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்காக இந்த ஐபிஎல் தொடரில் தான் முழங்காலிட்டு தன்னுடைய ஆதரவை தெரிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

12 விக்கெட்டுகளை வீழ்த்திய காட்ரெல்
மேலும் ஐபிஎல்லில் கேஎல் ராகுல் மற்றும் முகமது ஷமியின் அனுபவங்களை பெறவும் தான் ஆவலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் காட்ரெல் மிகவும் சிறப்பான பௌலிங்கை வெளிப்படுத்தினார். அந்த தொடரில் அவர் 12 விக்கெட்டுகளை 8.25 சராசரியுடன் வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications