மெல்போர்ன் : கடந்த பகலிரவு போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
இந்நிலையில், அந்த அணியை திருப்பி அடிக்க வேண்டிய பொறுப்பு தற்போதைய கேப்டன் அஜிங்க்யா ரஹானேவிடம் வந்துள்ளதாக முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கேப்டன் விராட் கோலி, பௌலர் முகமது ஷமி இல்லாத நிலையில் இன்னும் 3 போட்டிகளை சமாளிக்க வேண்டிய பொறுப்பு ரஹானேவிற்கு உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த பகலிரவு போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் முதல் இரண்டு நாட்கள் போட்டியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்திய அணி 3வது நாளில் கட்டுப்பாட்டை இழந்துள்ளதை முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சரியாக மீட்டிங்கின் போது பற்ற வைத்த கவாஸ்கர்.. பிசிசிஐ கூட்டத்தில் காரசார புகார்கள்.. கோலிக்கு குறி?
மேலும் ஆஸ்திரேலியாவை அடுத்த போட்டியில் திருப்பி தாக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளதாகவும் கேப்டன் விராட் கோலி மற்றும் பௌலர் முகமது ஷமி அணியில் இல்லாத நிலையில், மொத்த பொறுப்பும் தற்போதைய கேப்டன அஜிங்க்யா ரஹானேவின் கைகளில் வந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். எந்த காம்பினேஷனில் வீரர்களை விளையாட வைப்பது என்பது குறித்தும் அவர் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.