திண்டுக்கல்: டிஎன்பிஎல் டி-20 மூன்றாவது சீசனில் நேற்று நடந்த ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை லைகா கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. கோவையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திருச்சி அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது.
தமிழ்நாடு பிரிமியர் லீக் முகப்பு | அட்டவணை / முடிவுகள்
திருச்சியின் எஸ். சுரேஷ் குமார் 35, பரத் சங்கர் 24, சோனு யாதவ் 21 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கோவையின் அஜித் ராம், மணிகண்டன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய கோவை, 13.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. துவக்க ஆட்டக்காரர் ஷாருக் கான் 40 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 67 ரன்கள் குவித்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் 35 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் கோவை, 4 ஆட்டங்களில் 2வது வெற்றியைப் பெற்றது.