போல்ட்டை விட வேகமானவர் டோணி என்ற ரசிகரை செமயா கலாய்த்த மஹிலா ஜெயவர்தனே
டெல்லி: டோணியை போல்ட்டுடன் ஒப்பிட்ட ரசிகரை முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மஹிலா ஜெயவர்தனே கலாய்த்துள்ளார்.
உலகின் வேகமான மனிதர் என்று கூறப்படுபவர் உசைன் போல்ட். மின்னல் வேகத்தில் ஓடும் போல்ட் கடைசியாக கலந்து கொண்ட 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதை அவரும் சரி, அவரின் ரசிகர்களும் சரி எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து தான் ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று அறிவித்தார் போல்ட்.
ஜெயவர்தனே
போல்ட் ஓய்வு பெறுவதாக அறிவித்த முடிவை வரவேற்று ட்வீட் போட்டிருந்தார் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மஹிலா ஜெயவர்தனே.
டோணி
ஜெயவர்தனேவின் ட்வீட்டை பார்த்த டோணி ரசிகர் ஒருவர், போல்ட்டை விட அதிவேகமான டோணியையும் மதிக்கிறேன் என்று கமெண்ட் போட்டார்.
பைக்
டோணி ரசிகரின் ட்வீட்டை பார்த்த ஜெயவர்தனே உடனே பதில் அளித்தார். அவர் தனது பதிலில் கூறியிருப்பதாவது, டோணி தனது பைக்கில் இருந்தாரோ? என்று கலாய்த்துள்ளார்.
பார்த்திருக்கிறீர்களா?
விக்கெட்டுகளுக்கு இடையே டோணி ஓடி எப்பொழுதாவது பார்த்துள்ளீர்களா மஹிலா? பேட்ஸுடன் வேகமாக ஓடுவது ஜோக் இல்லை என்று மற்றொரு ரசிகர் ட்வீட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications